Tuesday, December 11, 2018

தமிழ் மாநில 

NFTE BSNL
மாவட்ட செயலர்கள் கூட்டம் 


CGM அலுவலக வளாகத்தில் உள்ள NFTE தொழிற்சங்க அலுவலகத்தில் தோழர் P காமராஜ் மாநில தலைவர் தலைமையில் 11/12/2018 அன்று நடைபெற்றது.


தோழர் K நடராஜன் மாநில செயலாளர் அவர்களின்  துவக்கவுரையுடன் விவாதங்கள் துவங்கியது.

காலவரையற்ற போராட்ட ஒத்திவைப்பு,
கோரிக்கைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம், வருங்கால கடமைகள் குறித்து கருத்தாழம் மிக்க விவாதங்கள் நடைபெற்றது .

LPF பொதுச்செயலாளர் சகோதரர் சுப்பராமன் TEPU  அவர்கள் பேச்சு வார்த்தையில் நடந்தவைகளை எடுத்து உரைத்தார்.

தோழர் Pattabi Raman கோரிக்கைகள் மீதான முன்னேற்றம் குறித்த புரிதலை தெளிவுபடுத்தினார்.

தோழர் S பழனியப்பன் சம்மேளன துனைத் தலைவர்

தோழர் அ செம்மல் அமுதம்  சம்மேளனச் சிறப்பு அழைப்பாளர்

தோழர் Gopalakrishnan Ssg முன்னாள் சம்மேளனச் செயலாளர்,
தோழர் முரளி
தோழர் சுப்பராயன் உள்ளிட்ட மாநில சங்க நிர்வாகிகள் உரையாற்றினர்.

நமது கோவை மாவட்ட செயலாளர் தோழர் ராபர்டஸ் கலந்து கொண்டு உரையாற்றினார்.

தோழர் முத்தியாலு ஓய்வூதியர் சங்க துனைப் பொதுச்செயலாளர் கலந்து கொண்டு கருத்துரையாற்றினார்.

தோழர் R K சிறப்பான முறையில் வரலாற்று நிகழ்வுகளை நினைவு கூர்ந்து, போராட்டக்களத்தில் நாம் பின்வாங்கவில்லை  , சீறிப்பாய்வதற்கான தருணம் வரும் வரை காத்திருப்போம்
காலம் கனியும்
வெற்றி நமதே
என்று நிறைவுரையாற்றினார்.

இரவு 0730 மணியளவில் கூட்டம் நிறைவுற்றது.





No comments:

Post a Comment