Thursday, March 28, 2019

தோழர்களே! 
தோழியர்களே!!

இன்று பொது மேலாளர் அவர்களை கோவை மாவட்ட சங்கத்தின் சார்பாக சந்தித்தோம் அன்னூர் பழனிச்சாமி  அவர்களின் மாற்றல் குறித்து விவாதித்தோம்.  மாற்றல் விதிகளுக்கு புறம்பாக போடப்பட்டுள்ள மாற்றலை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை  வலியுறுத்தினோம். அப்படி செய்யாவிடில் ஏப்ரல் 2ஆம் தேதி முதல் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட போவதாக கடிதம் அளித்தோம். அதன் அடிப்படையில் விவாதம் நடத்தி  மாற்றலை நிறுத்தி  வைப்பதாக  உறுதியளித்தார். 

திருப்பூரில் இருந்து கோவைக்கு பரிவு அடிப்படையில் தோழர் தாமஸ் TTக்கு தற்காலிக மாற்றல்  உடனடியாக வழங்கப்படும்.  தோழர் சிவகுமார் அவர்களுடைய மாற்றல்  தேர்தலுக்கு பின்னர் கண்டிப்பாக போடப்படும் என்கின்ற உறுதிமொழிகளை PGM அவர்கள் அளித்தார். 

மேலும் பல்வேறு மாற்றல்கள் குறித்து விவாதித்தோம. மாற்றல்கள் குறித்து தேர்தலுக்கு பின்னர் சுமுகமான முடிவு செய்யப்படும்.

வால்பாறைக்கு இந்த ஆண்டு கோவையிலிருந்து யாரையும் அனுப்புவதில்லை என்ற முடிவு மேற்கொள்ளப்பட்டது.  வால்பாறையிலிருந்து மாற்றல கேட்டுள்ள இருவருக்கும்(Tenure முடிந்தவுடன்) மாற்றல் வழங்கப்படும்.


அந்த அடிப்படையில் நமது போராட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது. சுமூகமான தீர்விற்கு உதவிய மாவட்ட நிர்வாகத்திற்கு குறிப்பாக PGM,  AGM (Admin) க்கு மாவட்ட சங்கத்தின் நன்றிகளை உரித்தாக்குகிறோம்.

No comments:

Post a Comment