Friday, August 23, 2019


இறுதி வாக்காளர் பட்டியல்...8வது உறுப்பினர் சரிபார்ப்பு.


16-09-2019 அன்று நடைபெற உள்ள 8-வது உறுப்பினர் சரிபார்ப்புத் தேர்தலுக்கான தமிழக வாக்காளர் இறுதிப் பட்டியல் வெளியிடப் பட்டுள்ளது.

மாவட்டம் வாரியாக வாக்காளர் எண்ணிக்கை...

CGM அலுவலகம் - 265
கோவை - 787
தருமபுரி - 227
கும்பகோணம் - 282
குன்னூர் - 146
தஞ்சாவூர் - 401
நெல்லை - 432
கடலூர் - 492
ஈரோடு - 477
மதுரை - 839
பாண்டி - 169
திருச்சி - 723
விருதுநகர் - 261
காரைக்குடி - 279
நாகர்கோவில் - 253
சேலம் - 743
தூத்துக்குடி - 232
வேலூர் - 674

தமிழகத்தில் அதிகபட்சமாக மதுரையில் 839 வாக்காளர்களும்., குறைந்தபட்சமாக குன்னூரில் 146 வாக்காளர்களும் உள்ளனர். மொத்த வாக்காளர்கள்: 7682


Tuesday, August 20, 2019


மக்கள் சேவையில் BSNL

மாலை நான்கு மணிக்குத்தான் வீடுவந்து சேர்ந்தேன். கணினியைத் திறந்து, முகநூலில், தமிழ்நதி தம் வீடுபற்றி எழுதிய பதிவொன்றை வாசித்தேன். அவ்வளவுதான். நெட்ஒர்க் கைவிட்டது.

நாளைக்கு ஞாயிற்றுக்கிழமை ஆகையால் BSNL அலுவலகத்திற்கு உடன்தானே ஓடினேன், AE ஓர் அம்மையார். கனிவானவர். உடனே கனிந்தார். யாரோடோ தொலைபேசினார். எனக்குச் சொன்னார், “உங்க ஏரியாவுல இருந்து இப்பத்தான் வந்து சாப்பிட்டுக்கிட்டு இருக்கிறார். நீங்க போங்க! நான் அனுப்பி வைக்கிறேன்.”

எனக்கு சங்கடமாக இருந்தது. மதியச் சாப்பாட்டை மாலை ஐந்துமணிக்குச் சாப்பிடுகிற ஓர் ஊழியன்!

சம்பளமும் சரியாகத் தராமல் BSNL-ஐ ஒழித்து தனியார்க்கு ஒப்படைக்கக் காய்நகர்த்துகிற ஓர் அரசாங்கம். அப்படியும் கடமை சுணங்காத அரசு ஊழியர்கள்!

எனக்கு BSNL; எங்கள் பாப்பாவிற்கு (அதாவது டாக்டரம்மா வீட்டில்) AIRTEL. இரண்டிற்கும், ஒரு பிரச்சனை என்றால், நான்தான் அலைவேன்.

சத்தியம் இது: ஒப்பிட, BSNL சேவையே உயர்ந்ததாய்க் காண்கிறேன்.

“யாரு, மேடம், டெக்னீஷியன்?”

“ஹரிக்கிருஷ்ணன்.”

“எனக்கு அவரைத் தெரியுமே! கீழே போய்ப் பார்த்துட்டுப் போறேன்.”

ஒரு வாரத்திற்கு முன்பு ஒரு டீக்கடையில் அவரைப் பார்த்தேன். தெரிந்தமுகம், ஆனால் யாரென்று தெளியவில்லை.

“ஸார், என்னை ஞாபகம் இல்லையா?”

“வேலையுதம்தானே? அந்தப் பெட்ரோல் பங்க்ல...”

“இல்லை, ஸார், ஹரிகிருஷ்ணன். BSNL. உங்க வீட்டுல ப்ராடுபாண்ட் எல்லாம் நல்லா வேலை செய்யுதுதானே?”

கீழிறங்கி அவரைச் சந்தித்தேன்.

“வீட்ல போயி இருங்க, ஸார். உடனே வர்றேன்.”

வந்தார்; வேலையை முடித்துத் தந்தார். விடைபெறும்போது, “இவ்வளவு புத்தகம் வெச்சிருக்கீங்களே, நீங்க...?”

என்ன பதில் சொல்வது என்று புரியாமல் சங்கடப்பட்டேன்.

“எழுத்தாளரா?”

அடுத்து, குமுதம் ஆனந்தவிகடனில் எழுதியிருக்கிங்களா என்று கேட்டுவிடுவாரோ என்று மேலும் சங்கடப்பட்டேன்.

“ஏதாவது புத்தகம் போட்டிருக்கீங்களா, ஸார்?”

“ஆமா, நாவல் மாதிரி ஒன்னு; அப்புறம் கவிதைப் புத்தகம் ஒன்னு.”

“நான் வண்ணநிலவன்லாம் படிச்சிருக்கேன், ஸார். அதைவிட்டு விலகி இப்படி வந்து வேலையில சிக்கி... நாளைக்கு லீவுங்கிறதால இன்னிக்கு அஞ்சு மணிக்கெல்லாம் போகமாட்டேன் ஸார். ஒரு பிரச்சனைன்னு வந்தா படிக்கிற புள்ளைங்க, பாவம், என்ன பண்ணுவாங்க? அதனால லேட்டாத்தான் போவேன்.”

இவ்வளவும் என்வீட்டு வாசற்படியில். அவரை இழுத்து அணைத்தேன். அது வண்ணநிலவனுக்காக என்று அவர் அறிய வாய்ப்பில்லை.

“உங்க கவிதைப் புத்தகம் எங்கே கிடைக்கும், ஸார்?”

அவரை வீட்டுக்குள் இழுத்து, “தாய்வீடு” ஒரு பிரதியை எடுத்து,

ஹரிகிருஷ்ணனுக்கு
அன்புடன்
ராஜசுந்தரராஜன்

என்று கையொப்பமிட்டுத் தந்தேன்.


தேர்தல் பிரச்சார உலா

அன்பு தோழர்களே!
தோழியர்களே!!
இன்றை நாள் பிரச்சார பயணம் மாவட்ட சங்க முன்வாயிலாக உற்சாகமாக தொடங்கிய நமது சங்க தோழமை தோழர்கள்.

இரண்டாம் நாள்:
11 மணி.
RS புரம் Exge தோழர் VS அவர்களுடன் சங்க தேர்தல் பணிபற்றிய  நேர்காணலில்,சங்க தோழர்கள் அர்பணிபோடு செயல்பட்டதை பற்றிஅவர்
மெய்சிலி போனார்.
NFTE ன் வெற்றி! துல்லியமாக உருதி செய்யபட்டது என்று
அகமகிழ்தார்.
நன்றியோடு பயணம்
தொடர்ந்து----------

இரண்டாம் நாள்:
11:30 மணி.
PN புதூர் சென்றடைந்தோம்.
தோழர்கள் எதிர்பார்போடு காத்திருந்தனர்.அவர்களோடு அளவளாவி போது Bsnl நிலைகண்டு கடந்த காலம்(2004 முதல்2019 வரை)நிகழ்ந்த நிகழ்வுகளை நினைத்து (போனஸ்,மெடிக்கல்,பயணபடி,இன்னம்பிர
சலுகைகள்தடைசெய்யபட்டது )வேதனை யுற்று இனியும் வேண்டாம் இந்த நிலை அனுமதியோம்"NFTE யை வெற்றிடைய செய்வதே நோக்கமாக தோழர்கள் சூலுரைத்தனர்.
மனகிழ்ச்சியோடு
அடுத்த பயணம் தொடர்ந்து-----------
சந்தோஷ மழையில் நனைய தொடங்கியபோது உண்மையான வருணபவான் இயற்கையான மழையை நம்மீது எய்து சொட்ட சொட்ட 
நனைந்தபடி நமது பயணம்-------

இரண்டாம் நாள்:
12:30 மணி.
சாய்பாபா காலணி வந்தடைந்தது.இங்கு மதிய உணவு பின்னர்.
மதியம் 1:00 மணி.  தோழியர்களுடன் நேர்காணலில் பகிர்ந்து கொண்டபோது இங்கு கிளை செயலர் ஓய்வு பெற்று விட்டார்
 அவருக்கு பதிலாக ஏன் யாரையும் போடவில்லை என அன்புடன் கேட்டனர்
அதற்கான காரணத்தை விழக்கியபோது  அகம்மகிழ்ந்து அன்போடு தேர்தல் நிதியை கொடுத்து மகிழ்ச்சியடைய செய்தனர்.
அங்கு
பல தோழர்களை அன்போடு அனுகியபோது அவர்கள் கூறிய பதிலில் NFTE யின்
வெற்றியை யாராலும்,
எவராலும் தடுத்து நிருத்த முடியாது, உண்மை அனுபவவிப்பை
யாராலும் மறைக்கவும் முடியாது இதை கேட்ட
நமது தோழர்கள் நெகிழ்ந்து போனார்கள்!!!
நெகிழ்ச்சியோடு பயணம் தொடர்ந்து-------------

இண்டாம் நாள்:
மாலை 4:30 மணி.
PGM அலுவலகம் தோழர்கள் பிரபாகரன் CSC. ஓய்வு பெற்ற மிக அனுபவம் வாய்ந்த
தோழர் ஈசாக் TT அவர்கள் மற்றும் நமது தோழர்களோடு
மாற்று சங்க தோழர்களோடு ஏற்பட்ட நேர்காணலில் பலர் கூறியது. BSNL உருவாகியதிலிருந்து 
இன்று வரை
NFTE மட்டுமே இருந்திருந்தால் நமது
நிலை
இப்படி ஆகியிருக்குமா? இப்பவாவது  மக்களுக்கு புரியுமா?
எப்படியாவது  "சாரி" எங்க வோட்டோடு சேர்ந்து NFTE வெற்றி பெற்றே
தீரும் இதுவே காலத்தின் கட்டாயம்!
உண்மையின் உறைவிடம்!
வருங்கால சந்ததிளின் புகழிடம்.
மகிழ்ச்சியோடு பயணம் தொடர்ந்து------















NEW DELHI: The Cabinet is soon expected to consider a formal proposal for the revival of cash-strapped state-owned Bharat Sanchar Nigam Limited (BSNL) and Mahanagar Telephone Nigam Limited (MTNL), with an approval expected by month end, according to a person aware of the matter.

The decision was taken after a high-level meeting at the Prime Minister's Office (PMO) on Tuesday, despite the finance ministry reiterating its opposition on the revival package, citing additional financial burden on the state exchequer..

The Department of Telecommunications (DoT) Secretary Anshu Prakash and BSNL Chairman PK Purwar were also present at the meeting.

The Narendra Modi-led government is looking at ways to reduce the financial stress of the state-controlled telcos by allocating next-generation of frequencies to commercially launch high-speed 4G services, the absence of which has hurt their revenue, and monetizing land assets, besides an employee retirement scheme.

The Voluntary Retirement Scheme (VRS) would cost Rs 6,365 crore to BSNL, and Rs 2,120 crore to MTNL while the administrative cost for the allocation of 4G radio waves to BSNL is pegged at Rs 14,000 crore and Rs 6,000 crore for MTNL.

BSNL and MTNL have been financially stressed owing to high revenue-to-wage ratio, with over 1.63 lakh employees.
"If the outcome of today's meeting is positive, the Cabinet decision is expected by this month-end itself," a BSNL note, ahead of Tuesday's meeting read.

In response to the Cabinet memo, the Finance Ministry has earlier raised certain queries. It had argued that a financial impetus to the two telcos or any upfront payout to BSNL and MTNL could bring in a huge burden on the budgetary resources.

In July, a Group of Ministers (GoM) headed by Home Minister Amit Shah had also discussed the revival of two state-owned telecom carriers


Monday, August 19, 2019

நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்.



NFTE வெற்றி பெற்றால்தான் இனி BSNL ஊழியர்களின் வருங்காலம் என்பதை நாம் சென்ற இடமெல்லாம், ஒவ்வொரு ஊழியரும் அனுபவித்து, உணர்ந்து,

அந்த சொல்லுன்னா துயரத்தையும்,நம்மோடு பகிர்ந்து,கடந்த கால NFTE யின் சாதனைகள்,
2004 ல் தானை தலைவர்
குப்தா அவர்கள் ஊழிர்களின் ஓய்வு கால முடிவுக்கு 5 வருடம்  முன்னர் வாரிசுகளுக்கு தகுதி அடிபடையில் வேலை வாய்ப்பு, தவறவிட்டதின் விளைவு நாமும் நமது BSNL லின் இன்றைய நிலையும், நினைவுகளும், அவர்களின் அனுபவுமே  நமது NFTE யின் வெற்றிக்கு நிதர்சன உண்மையாகிறது.
எனவே BSNL ஊழியர்கள் அனைவரும் தவறாது
தன்னோட கடந்தகாலத்தையும், நினைவுகளையும், ஒப்பிட்டு பார்த்து NFTE க்கு ஒவ்வொரு ஊழியரும்
 வாக்களிக்க வேண்டும் 
இதுவே BSNL ஊழியர்களின்
நிகழ்கால வாழ்வும், கனவும்.
நன்றி தோழர்களே!
தோழியர்களே!!

அன்பு தோழர்களே!
தோழியர்களே!!
நமது சங்க சரிபார்ப்பு
தேர்தலுக்காக மெயின் தொலைபேசி நிலையத்திலிருந்து காலை 10.மணிக்கு ஆரம்பித்து அயராது தேர்தல் பயணத்தில் பயணிக்கும் நமது சங்க தோழர்கள்  துடியலூர், பெரிநாயக்கன்பாளையம்,லட்சுமிபுரத்தில் கேபிள் பழுது பார்க்கும்  நமது தோழர்கள் ராஜாராமுடன் பணிபுரியும் இடத்திலும், நரசிம்மநாயக்கன்பாளையம் TVS நகர், பாரதியார் யுனிவர்சிட்டி தொலைபேசி நிலையம் என சென்ற இடமெல்லாம் நமக்கு சிறப்பான வரவேற்புகளும், வாழ்த்துக்களும் நிறைந்திருக்கிறது.

பெரியநாக்கன்பாளையம் தோழியர் பிரேமா அவர்களின்
அன்பளிப்புடன் தொடரும் வெற்றி பயணம்

நமது பயணத்தில் கோவைபுதூர்,மற்றும்
செல்வபுரமும், தன்னிகரில்லா பயணமாக சிறக்க அனைவரது வாழ்த்து
மழையில் நனைந்த பயணமா அமைந்தது.
இன்றைய பயணம் BSNL ஊழியர்கள்
அனைவருக்கும் ஒரு நன்னாளாக மாறிபோனதே!












கோவை மாவட்ட தேர்தல் பிரச்சார துவக்க விழா  14/08/2019 அன்று நமது சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.
அவ்விழாவில் கிளைச்செயலர்கள், மாவட்ட  சங்க நிர்வாகிகள் முன்னிலையில் உள்ள தோழர்களும் தோழியர்களும் கலந்து கொண்டனர்.


மாவட்ட செயலாளர் தோழர் A ராபர்ட்ஸ் தலைமை தாங்கினார். தோழர் S S கோபாலகிருஷ்ணன் மேனாள் சம்மேளனச் செயாலாளர் தேர்தல் பிரச்சார விளம்பரத்தை வெளியிட்டு 8வது உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தல் பிரச்சாரத்தை கோவையில் துவங்கி வைத்து உரையாற்றினார்.  


தோழர்  A செம்மல் அமுதம் சம்மேளனச் சிறப்பு அழைப்பாளர் கோவை மாவட்டத்தில் நாம் ஏன் அதிக வாக்குகளை பெற வேண்டியதன் அவசியத்தை விளக்கி உரையாற்றினார். 


தோழர் பாலசுப்பிரமணியன் மாவட்ட உதவிச் செயலாளர் நன்றி கூறினார்












Friday, August 9, 2019

தமிழ் மாநில தேர்தல் பிரச்சார துவக்க விழா கோபியில் 01/08/2019 அன்று நடைபெற்றது.
அவ்விழாவில் மாவட்ட செயலர்கள், மாநில சங்க நிர்வாகிகள் மாநில சங்கத்தால் கெளரவிக்கப்பட்டனர்.
நமது பொதுச்செயலாளர் தோழர் C சிங் அவர்கள் நமது மாவட்ட செயலாளர் தோழர் A ராபர்ட்ஸ் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து வரும் தேர்தலில் வெற்றி வாகை சூடிட வாழ்த்தினார்.