தோழர் ஜெகன் பிறந்தநாள் விழா
கோவை மாவட்ட சங்க அலுவலகத்தில் 17/05/2018 அன்று காலை 1100 மணியளவில் விழா துவங்கியது.
தோழர் ராபர்ட்ஸ் DS அனைவரையும் வரவேற்று தோழர் ஜெகன் உடன் அவரது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்..
தோழர் N ராமகிருஷ்ணன் DP தலைமையுரையில் தோழர் ஜெகன் அவர்கள் இறுதியாக கலந்து கொண்ட மேட்டுப்பாள யம் நிகழ்வு மற்றும் அவர் நீங்கா நினைவுகளை பதிவு செய்தார் .
BSNLEU மாநிலச்செயலர் தோழர் பாபு ராதாகிருஷ்ணன் , மாவட்ட செயலர் தோழர் c ராஜேந்திர ன் மற்றும் முன்னணித் தோழர்களுடன் கலந்து கொண்டு சிறப்பித்தனர். தோழர் பாபு ராதாகிருஷ்ணன் உரையில் ஜெகன் அவர் தம் தோழமையை , மாற்று கருத்து கொன்டோரையும் அரவணைக்கும் பண்பையும் புகழ்ந்தார். போபாலில் எல்லோரும் தோற்ற போதும் தோழர் ஜெகன் பெற்ற வெற்றி எல்லா தரப்பினரும் மதிக்கும், போற்றும் ஒப்பற்ற தலைவராக ஜெகன் விளங்கினார் என்பதற்க்கு சான்று என்றார் .
தோழர் L சுப்பாராயன் CT தன திருமணத்தை தோழர் ஜெகன் தலைமையேற்று நடத்தியதை நினைவு கூர்ந்தார்.
தோழர் B அருணாச்சலம் DS Retd அஸோஸியேஷன் சார்பில் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார் .
தோழர் A செம்மல் அமுதம் ஜெகன் பிறந்த நாளை இளையர் தினமாக கொண்டாடும் தருணத்தில், புதிய தோழர்களை, தோழியர்களை குறிப்பாக BSNL ல் பணியில் சேர்ந்தவர்களை உணர்வு பூர்வமாய் இயக்கங்களில் பங்கேற்கவைக்க வேண்டியதின் அவசியத்தை வலியுறுத்தினார் .
தோழர் கோட்டியப்பன் நன்றியுரையுடன் விழா நிறைவுற்றது.
A ராபர்ட்ஸ்
மாவட்டச் செயலர்
No comments:
Post a Comment