Monday, September 10, 2018






ஒப்பந்த தொழிலாளர்களுக்கு சம்பளம் உடனடியாக வழங்க கோரி ஆர்ப்பாட்டம்

கோவை மாவட்டம் மத்திய தொலைபேசி நிலையத்தில்
NFTE  -  BSNLEU
TMTCLU  - TNTCWU
சங்கங்கள் இணைந்த  ஆர்ப்பாட்டம் - 10-09-18
மதியம் 0100 மணியளவில் நடைபெற்றது.
100 க்கும் மேற்பட்ட தோழர்கள், தோழியர்கள் பங்கேற்ற கூட்டத்தில்
BSNLEU மாநிலச் செயலர் தோழர் பாபு ராதாகிருஷ்ணன்
NFTE சம்மேளன பொறுப்பாளர் தோழர் A செம்மல் அமுதம்
NFTE மாவட்டச் செயலர்  தோழர் A ராபர்டஸ்
BSNLEU மாவட்டச்செயலர் தோழர் C ராஜேந்திரன்
மற்றும் TMTCLU  - TNTCWU
கிளைச் சங்க, மாவட்டச் சங்க
பொறுப்பாளர்கள் கருத்துரை வழங்கினர்.
ஆர்ப்பாட்டத்தில ஒப்பந்த ஊழியர்களுக்கு பிரதி மாதம் 7ம் தேதிக்குள் சம்பளம் வழங்கிடவும், நிலுவையில் உள்ள 2 மாத சம்பளத்தை உடனே வழங்கிடவும் கோரிக்கை முழக்கமிடப்பட்டது..

பின்னர் மதியம் 0300 மணியளவில்  Labour Officer அலுவலகத்திற்கு நேரில் சென்று கோரிக்கை மகஜர் அளிக்கப்பட்டது.
விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.

No comments:

Post a Comment