Saturday, January 5, 2019

தன்னிகரில்லா தலைவன்தோழர் O P குப்தா


தோழர் O P குப்தா P & T,  DOT, BSNL என்று நம் தொலைத்தொடர்புத் துறை பரிணாம வளர்ச்சி கண்ட போதும், தொழில் நுட்பம் வளர்ந்த போதும் ,  அரசும் பிரதமர்களும், மந்திரிகளும மாறிய போதும்....  தொழிலாளர் நலன், முன்னேற்றம் ஒன்றே தன்  லட்சியம் , கொள்கை, சித்தாந்தம் என்று வாழ்ந்த தலைவன் தோழர் O P குப்தா.

 உலக தொலைத்தொடர்பு வரலாற்றில்  நவீன தொழில்நுட்பம் புகுந்து உலக நாடுகளில் எல்லாம் தொழிலாளர்கள் வேலையிழந்து வாடிய போது இங்கே ஒருவர்கூட வேலையிலிருந்து வெளியேற்றப்படாமல் பார்த்துக் கொண்ட தாயுமானவன் தோழர் O P குப்தா.

சமூகத்தின் விளிம்பு நிலையிலிருந்த லட்சத்திற்கும் மேற்பட்ட தினக்கூலிகளாய் இருந்த மஸ்தூர்கள், 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட RTP க்களை நிரந்தரம் செய்த அற்புதத் தலைவன் தோழர் O P குப்தா.

அரசு ஊழியர்களுக்கு Productivity linked BONUS, Timebound Promotion, cader Restructuring, என்று பல ஊழியர் நலன் காக்கும் திட்டங்களை வாதாடி , போராடி பெற்றுத் தந்த தன்னிகரில்லா தலைவன் தோழர் O P குப்தா.

BSNL  பொதுத்துறை, ஏன் தனியார்மயமே நாளை ஆனாலும் அரசின் ஓய்வுதியத்திட்டம் இறுதிவரை தொடரும் என்று உறுதிசெய்து தொழிலாளர்களின் இதயக் கோவிலில் குடியிருக்கும் உத்தமத்தலைவர் தோழர் O P குப்தா.

ஒற்றுமையின் நாயகனே உன்னை இன்று நினைக்கும் ஒவ்வொரு BSNL தொழிலாளிக்கும்  உன்னிடம் ஒரு வேண்டுகோள் உண்டு.

உனது விசாலமான பார்வை,
கோரிக்கையின் மீதான தெளிவு,  ஊழியரின் நாடித்துடிப்பை அறிந்து செயல்புரியும் விவேகம்,  போராட்டத்தை எப்போது துவங்கி எப்படி முடிப்பது, Negotiation skill, கோரிக்கையை வெல்லும் சாணக்கியம்,  இவற்றையெல்லாம் AUAB தலைவர்களுக்கு அள்ளித் தருக, எங்கள் நலம் பேண அருள்புரிக தலைவா...தோழர் O P குப்தா.





No comments:

Post a Comment